Aug 26, 2012

ஆயில் கம்பெனி டாங்க் வெடித்து 19 பேர் சாவு




காரகாஸ், ஆக. 26: வெனிசூலாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று 2 டாங்க் வெடித்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.மேற்கு வெனிசூலாவில் உள்ள பராகுனா தீபகற்பத்தில் உள்ள அமாய் என்ற பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களில் 10 வயது சிறுவனும் அடங்கும். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அருகாமையில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு விட்டனர் என்று பால்கன் மாநில கவர்னர் ஸ்டெல்லா லூகோ தெரிவித்தார்.பிற்பகல் 1 மணிவாக்கில் ஒரு இடத்திலிருந்து காஸ் கசிவு ஏற்பட்டு, பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் 2 டாங்குகள் தீப்பற்றி எறிகின்றன. அருகில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன என்று எண்ணெய் துறை அமைச்சர் ரஃபெல் ரமீர்ஸ் தெரிவித்தார். பெரும் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பந்து எழும் வீடியோ இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...