Sep 22, 2012

ஐ.நா. உலக அமைதி தினம் ஐஸ்வர்யா ராய் பங்கேற்பு



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஐநா: ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினமாக ஐநா கொண்டாடி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நேற்று உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், உலக அமைதிக்கான ஐநா தூதர் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மானுடவியல் அறிஞர் ஜேன் குட்டால்,
அமெரிக்க எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான இலி வீசெல், அமெரிக்க நடிகையும் பாடகியுமான மோனிக் கோல்மேன் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன். உலக அமைதிக்காக உதவ வேண்டும் என்று நோக்கத்துக்காக நாங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம் என்றார். பின்னர் நடிகர் டக்ளசுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். உலக அமைதி தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்திய சிறுவர், சிறுமிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக பல நாடுகளில் மனித உரிமை மீறல்களில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...