Oct 12, 2012

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு


வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிப்புஸ்டாக்ஹோம்: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் சாதனைப்படைத்த, ஜப்பானின் யமனாகாவுக்கும், பிரிட்டனின் ஜான்குர்டானுக்கும் அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான விருது, ஒளித்துகள் மற்றும் அயனிகள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, ரசாயனத்துறைக்கான, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உடல் செல்களில் ஊடுருவும் புரதம்(ஜி-புரோட்டீன்) வெளிப்புற சமிக்கைகளை பெறுவது தொடர்பான, ஆராய்ச்சி மேற்கொண்ட, அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட் லெப்கோவிட்ஸ், பிரைன் கோபில்காவின் சாதனைகளை பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கு, இந்த ஆராய்ச்சி, பேருதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 10ம்தேதி, நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ப்ரெட் நோபலின் நினைவுத்தினத்தன்று, இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு ஒவ்வொரு துறையிலும் இருவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால், 6.8 கோடி ரூபாய் பரிசு, இரண்டாக பகிர்ந்தளிக்கப்படும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...