Feb 16, 2013

புதிய போப்: வரும் மார்ச் 15ல் தெரிவிற்கான ஒன்று கூடல்

புதிய போப்: வரும் மார்ச் 15ல் தெரிவிற்கான ஒன்று கூடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013,
போப் பெனெடிக்கிற்குப் பதிலாக புதிய போப்பை தெரிவு செய்வதற்கான பாதிரியார்களின் ஒன்று கூடல் மார்ச் 15ம் திகதிக்குள் ரோமில் நடைபெறும் என வாட்டிகன் அறிவித்துள்ளது.ஆனால் இத்தெரிவு போதுமான அளவு கார்டினல்ஸ் எனப்படும் உயர் பதவியில் உள்ள பாதிரியார்கள் ஒன்று கூடினால் மட்டுமே நடைபெறும் எனவும் வாட்டிகன் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து வாட்டிகனில் உள்ள பாதிரியார்கள் சார்பாகப் பேச வல்லவரான ஃபாதர் ஃபெர்டெரிக்கோ லொம்பார்டி கருத்துரைக்கையில், இம்முறை போப் பெனெடிக்டின் பதவி துறப்பு தனித்துவமான வரலாற்றில் அரிதான ஒன்றாக இருப்பதனால் புதியவரைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகளிலும் ஒன்று கூடலிலும் வித்தியாசமான நேரம் பிசகாத
முறைகளையே கையாள வேண்டியிருக்கிறது என்று கூறினார்.
இவர் முன்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களைக் கொண்டு இந்த ஒன்று கூடல் மார்ச் 15-20 திகதிகளுக்குள் இடம்பெறும் என்று கூறியிருந்தார்.
இதேவேளை புதிய போப் தெரிவும் பதவியேற்பும் விரைவாக நிகழும் வாய்ப்பு நிரம்பவே உள்ளது எனவும் இதற்குக் காரணமாக நிகழ்காலத்தில் பதவியில் இருக்கும் போப் மரணமடையாத அதே நேரம் தான் பதவி விலக விரும்புவதை மானசீகமாக ஒத்துக் கொண்ட ஒரு நிலமையுடனேயே வாட்டிகனின் தேவாலயம் உறவு பேணவுள்ளது எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...