Sep 9, 2012

சீனாவில் மழை வெள்ளம்: 100 பேர் பலி

சீனாவில் இது வரை சந்திக்காத பெரும் மழை வெள்ளத்தினால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களின் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கின்றனர். இயற்கை அழிவில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு மீட்க சீன அரசு சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இது போன்ற மழை சீனாவில் பெய்தது இல்லை என்றும் 60 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற மழை வெள்ளத்தை பார்த்ததில்லை என்றும் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பீஜிங் அருகே பாங்ஷான் பகுதி பெரும் அளவில் பாதிப்புள்ளாகியிருக்கிது.

புகைப்பழக்கத்தை ஒரு மாதம் கைவிடுங்கள்: இங்கிலாந்து அரசு பிரச்சாரம்



புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரப் படம் ஒன்றுஇங்கிலாந்தில் புகைப்பழக்கம் உள்ளவர்களை இலக்குவைத்து ஒரு புதிய பிரச்சார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'ஸ்டாப்டோபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 28 நாட்களுக்கு நடக்கிறது.

புதுமையான பிரச்சாரம்

புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு மாதத்துக்காவது புகைப் பழக்கத்தை

புதிய பரிணாமம்: வத்திக்கான் இதழில் பால்ட் பார்பி டோல்

புதிய பால்ட் பார்பி டோல் உருவாக காரணமான சமூக வலைத்தளங்களில் வெளியான படம்


புதிய பால்ட் பார்பி டோல் உருவாக காரணமான சமூக வலைத்தளங்களில் வெளியான படம்
வத்திக்கானில் பாப்பரசரின் அன்றாட பணிகள் மற்றும் அவரது சர்வதேச விவகாரங்களை வெளியிடுகின்ற அதிகாரபூர்வ செய்தி இதழான ஒஸ்ஸர்வேட்டோரி ரொமானோ வழமைக்கு மாறான வர்ணப் படமொன்றையும் கட்டுரையொன்றையும் அதன் கடந்த ஞாயிறு இதழின் முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பார்பி டோல் என்று அழைக்கப்படும் புதிய பாவை பொம்மையின் படம் தான் அது. இந்தப் புதிய பார்பி டோல் சிறார்களுக்கான மருத்துவமனைகளில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.
தாய்மாரோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு யாரோ புற்றுநோயால்

இந்தியாவில் பால் வளத்தை மேம்படுத்திய வெர்கீஸ் கூரியன் காலமானார்

டாக்டர் கூரியன்
டாக்டர் கூரியன்
இந்தியாவுடைய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வெர்கீஸ் கூரியன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90.
பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்த இந்தியாவை, தன்னிறைவு காண வைத்ததோடு உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் என்ற நிலைக்கு கொண்டுவந்த பெருமை டாக்டர் கூரியனுக்கு உண்டு.

இந்தியாவிலேயே மிக உயரமான குடும்பம் இதுதான்



உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள்.
குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 இஞ்ச், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்மாரான 2 வயதாகும் ம்ருகா (6 அடி 1 இஞ்ச்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 இஞ்ச்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

சீனாவில் இன்று பூகம்பம்! 10,000 வீடுகள் சேதம், 1 லட்சம் பேர் வெளியேற்றம்!!

, Friday 07 September 2012,



1 லட்சம் பேர் வெளியேற்றம்!
சீனாவில் அடுத்தடுத்த இரு தடவைகள் பூகம்பம் ஏற்பட்டதில், குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் காயமடைந்தனர், 20,000 வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சீனாவில் யுனான் மற்றும் குய்ஸோ மாகாணங்களின் எல்லையருகே இன்று 0319 GMT நேரம் முதலாவது பூகம்பம் ஏற்பட்டது எனவும், 45 நிமிடங்களின் பின் அடுத்த பூகம்பம் தாக்கியது எனவும், அமெரிக்க ஜியோலோஜிகல் சர்வே தலைமையகத்தில் பதிவாகியுள்ளது. இரு பூகம்பங்களும், 5.6 magnitude அளவில் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளன.

இளவரசர் ஹரி, திடீரென தாக்குதல் ஹெலிகாப்டர் செலுத்த ஆப்கான் போகிறார்!




“பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த ஆஃப்கானிஸ்தான் செல்கிறார்”  இவ்வாறு அறிவித்துள்ளது  பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு.
தலிபான்களுக்கு எதிரான யுத்தத்துக்கு நேட்டோ நாடுகளின் படைகளுடன் பிரிட்டிஷ் படைகளும் அங்கு யுத்தம் புரிகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் ‘பார்ட்டி’ கொண்டாடி, நிர்வாண போட்டோக்கள் வெளியானதில், சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் இளவரசர். இப்போது, யுத்தத்துக்கு செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது: பிரதமர் வாழ்த்து


சென்னை, செப்.9: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தயாரித்து விண்ணில் செலுத்திய 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினார் பிரதமர் மன்மோகன் சிங்.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வில் மைல் கல் எனப்படும் இந்தத் திட்டத்தில், இஸ்ரோவின் 100வது ராக்கெட் பிஎஸ்.எல்.வி சி21 ராக்கெட் இன்று காலை 9.51க்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் இந்திய செயற்கைக்கோள்களுடன் பிரான்ஸ் நாட்டு செயற்கைக் கோளும் சேர்ந்து ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நோக்கில் செயற்கைக்

46 மாடிகள் கொண்ட தென் இந்தியாவின் மிக உயர அபார்ட்மெண்ட்

கொண்ட, தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும். மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஸ்விம்மிங் பூல், தனித்தனி லிப்டுகள், ஹெலிபேட், கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏர்-கண்டிசனிங், சிஸ்கோ நெட்வோர்க்குடன் கூடிய வசதிகள், நீரை ரீ-சைக்கிள் செய்யும் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. உலகின் முன்னணி கட்டடவியல் நிபுணர்கள் இணைந்து இந்தக் கட்டடத்தை உருவாக்கி வருகின்றனர்.

சிறுமலையில் 4,000 ஆண்டுகள் பழமையான குறியீடு கண்டுபிடிப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், 4,000 ஆண்டுகள் பழமையான, பளியர் இனப் பழங்குடிகளின் குறியீடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சிறுமலை பளியர் இனப் பழங்குடிகளின் வாழ்வுமுறை ஆய்வின் போது, இந்தக் குறியீடுகள் கிடைத்துள்ளன. இவை, சிந்துச் சமவெளி நாகரிகத்தில் புதையுண்ட குறியீடுகளை போலவே உள்ளன.

இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாரயண மூர்த்தி கூறியதாவது: சிறுமலை பழங்குடியினர் வணங்கும், குலதெய்வக் கோவில் அருகே உள்ள, கன்னிமார் ஏழு பேரின் சிலைகள் புதைக்கப் பட்டுள்ளன. அதில் இரண்டில், இந்தக் குறியீடுகள் உள்ளன. குறிஞ்சி இன தமிழர்களான, பளியர் இன மக்கள்,

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!



நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் நாடும் அமெரிக்கா. இந்நாடு நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவே இருந்து வந்தது. இந்நிலையில் இப்போது அந்த இடத்தை இந்தியா பிடித்து இருக்கிறது. 2012ம் ஆண்டின் முதல்காலாண்டில் இந்தியா-நைஜீரியா வர்த்தகத்தின்(ஏற்றுமதி + இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லியன் டாலராக இருக்கிறது. முதல்காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன் டாலராகும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...