Sep 9, 2012

சீனாவில் மழை வெள்ளம்: 100 பேர் பலி

சீனாவில் இது வரை சந்திக்காத பெரும் மழை வெள்ளத்தினால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களின் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கின்றனர். இயற்கை அழிவில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு மீட்க சீன அரசு சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இது போன்ற மழை சீனாவில் பெய்தது இல்லை என்றும் 60 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற மழை வெள்ளத்தை பார்த்ததில்லை என்றும் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பீஜிங் அருகே பாங்ஷான் பகுதி பெரும் அளவில் பாதிப்புள்ளாகியிருக்கிது.
இந்த பகுதியை சேர்ந்த லீ வெண்டே கூறுகையில்: இந்த மழையினால் நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். எனக்கு சாப்பிட வழி இல்லை, தங்க வீடு இல்லை , ஏன் குடிக்க சுத்தமான தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்றார்.
60 லட்சம் ‌பேர் பாதிப்புமழையையொட்டி அடித்த கடும் காற்றில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. 60 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். சீன பொருளாதாரத்தை இந்த மழை சற்று அசைத்து பார்த்திருக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...