Nov 4, 2012

இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா



இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா
சனிக்கிழமை, 03 நவம்பர் 2012
சீனா சமீபகாலமாக தனது இராணுவத்தில் அதிநவீன தொழில் நுட்பங்களை புகுத்தி வருகிறது.ஏற்கனவே ஜெ-20 என்ற ரக ஜெட் போர் விமானத்தை ஏராளமாக தயாரித்து வைத்துள்ளது சீனா.
தற்போது ஜெ-31 என்ற புதிய நவீன போர் விமானத்தை தயாரித்து உள்ளது. இதன் வெள்ளோட்டம் வடகிழக்கு பகுதி மாகாணமான லியான்னிங் பகுதியில் நடந்ததாக ஆசிய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதன் மூலம் சீனா இராணுவ பலத்தில் உயரிடத்தை பெற்றிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையே இல்லாமல் 3 வருடம் வாழ்ந்து வந்த அதிசய சிறுவன் திடீர் மரணம்


[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
அமெரிக்காவில் கொலரடோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளை இல்லாமல் பிறந்த சிறுவன் நேற்று உயிரிழந்தான்.கொலரடோவைச் சேர்ந்த இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையின் பெயர் நிகோலஸ் கோக்.
இவனுக்கு தலைப் பகுதியில் மூளை என்ற பாகமே இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்படி பிறக்கும் குழந்தைகள் பிறந்த ஒரு சில நொடிகளிலேயே மரணித்துவிடும். ஆனால், அந்த விதியை உடைத்து நிகோலஸ் கோக் வாழ்ந்து வந்தான்.
எவ்வித மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது சீரான உடல் இயக்கங்களுக்காக ஏராளமான மாத்திரைகளை உணவை விட அதிகமாக சாப்பிட்டு வந்தான்.
இந்நிலையில், நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவனது

Nov 3, 2012

சிரியாவில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போர்


 ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2012
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் மிக தீவிரமாக நடந்து வருகிறது.சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கும், வர்த்தக நகரமான அலெப்பாவிற்கும் இடையே உள்ள முக்கிய விமான தளமான டாப்டனாசை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இராணுவம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸ் பகுதிகளுக்கு சிரியா மூன்று இராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் ஐ.நாவிடம் குற்றம் சுமத்தி உள்ளது.

எதனாலே உன் சீற்றம்


அழகான உலகிலே
இழிவான செயல்களால்
இயற்கை அன்னையே
இயலாது கொந்தழிக்கின்றாயா?
இல்லையேல் எதனாலே 
உன் சீற்றம் ???

வாழ்ந்து முடித்தோர் 
எது வந்தாலும் ஏற்கும் நிலையில்....
வாழ ஆசைகொண்டோர்
கண்களிலே பல ஏக்கம்...!!!
இடையினர் மனங்களோ
உன்னை எதிர்கொள்ளும் பயத்தினிலே..!!!
ஏதும் அறிய குழந்தைகளோ 
குறும்புகளுடன் சந்தோஷமாய்...!!!
நாளைய விடியலுக்காய்
விழித்திருக்கும் பல விழிகள்....!!!
எப்படி இருப்பினும்
உன்னை எதிர்கொள்ள
எம்மால் முடியாதம்மா...!!!

அடுத்தடுத்து துன்பங்கள்
அயராது தாக்கினாலும் 
எதிர்நீச்சல் போட்டிடலாம்..!!
அன்னையே உன்னை 
எதிர்த்திட முடியாதம்மா...!!!
இரங்கலாய் கேட்கின்றோம் 
இரக்கம் காட்டாயோ????

விண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை


விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.


"மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது.

சூடு பிடிக்கும் மொபைல் கதிர்வீச்சு

மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளைப் படித்து வருகிறோம்.

அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் கவனத்துடன் அரசுகள் கையாண்டு வருகின்றன. பாதிக்கக் கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும் போன்களை அங்கு விற்பனை செய்திட முடியாது.

இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால்,

ஜாவாவை நீக்கியது ஆப்பிள்

ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா சாப்ட்வேர் புரோகிராமினைத் தன் மேக் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து நீக்கியுள்ளதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது. 

தன் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தில், இதுவரை ஜாவா சாப்ட்வேர் தொகுப்பின் இயக்கத்தை இணைத்து ஆப்பிள் வெளியிட்டது. பயனாளர்களுக்கு ஜாவா பாதுகாப்பற்ற தன்மையைத் தருவதாகவும், அதன் மூலம் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவும் வாய்ப்பு எளிதாகின்றது என்றும், இணையவெளி பாதுகாப்பு வல்லுநர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவினை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. 

ஆனால், இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் கூறவில்லை

இன்டர்நெட்டில் புதுப்பாதை

இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது.

தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல்

செய்திகளைக் காவும் பத்திரிகைகளே நோயையும் காவுகின்றனவாம் - நிபுணர்கள் எச்சரிக்கை!

செய்திகளைக் காவும் பத்திரிகைகளே நோயையும் காவுகின்றனவாம் - நிபுணர்கள் எச்சரிக்கை!
[Sunday, 2012-11-04
News Service மருத்துவமனைகளில், வரவேற்பறைகளில் கிடக்கும், பழைய பத்திரிகைகளின் மூலம் தொற்று நோய் பரவும், என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.தனியார் மருத்துவமனைகளில், டாக்டரை பார்க்க, காத்திருக்கும் நேரத்தை சமாளிக்க, வரவேற்பு அறைகளில், பழைய பத்திரிகைகளை வைத்திருப்பார்கள். நோயாளிகள் பலர் இதை தொட்டு, படிப்பதால், பலருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக பிரிட்டனின், தேசிய சுகாதார மைய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
  
பிரிட்டனின், டோர்செட் மாவட்டத்தில், லைம்ரெஜிஸ் பகுதியில் உள்ள, பல் மருத்துவமனையில் 2004ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகைகள்,

கி.மு 4700 ஆண்டுகள் பழமையான நகரம் பல்கேரியாவில் கண்டுபிடிப்பு!

கி.மு 4700 ஆண்டுகள் பழமையான நகரம் பல்கேரியாவில் கண்டுபிடிப்பு!
[Friday, 2012-11-02
News Service ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்கேரியா நாட்டில் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய 4700 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.அந்த நாட்டின் புரோவாடியா நகருக்கு அருகே பூமிக்கடியில் இருந்த சுற்றுச்சுவருடன் கூடிய ஒரு 2 அடுக்கு மாடி வீடு மற்றும் கல்லறைகளை அவர்கள் தோண்டியெடுத்துள்ளனர்.
  
கி.மு. 4700 - 4200 ஆண்டுகள் வரை பழமையானதாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள இந்த நகரில் 350 குடும்பங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இந்த இடம் உப்பு உற்பத்தி மையமாக இருந்திருக்க வேண்டும். இங்குள்ள நீரூற்று தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு செங்கற்களை அவர்கள் உற்பத்தி செய்து, இறைச்சியை பாதுகாப்பதற்கு அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த நகரத்தை நிர்மாணிக்க உதவிய

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - வித்தியாசமான நடக்கும் தேர்தல்!

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - வித்தியாசமான நடக்கும் தேர்தல்!
[Saturday, 2012-11-03
News Service உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன. ஆனால் உண்மையில் இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது.
  
அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , மாநிலங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் " தேர்வு செய்வோர் அவை" யில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...