Nov 3, 2012

எதனாலே உன் சீற்றம்


அழகான உலகிலே
இழிவான செயல்களால்
இயற்கை அன்னையே
இயலாது கொந்தழிக்கின்றாயா?
இல்லையேல் எதனாலே 
உன் சீற்றம் ???

வாழ்ந்து முடித்தோர் 
எது வந்தாலும் ஏற்கும் நிலையில்....
வாழ ஆசைகொண்டோர்
கண்களிலே பல ஏக்கம்...!!!
இடையினர் மனங்களோ
உன்னை எதிர்கொள்ளும் பயத்தினிலே..!!!
ஏதும் அறிய குழந்தைகளோ 
குறும்புகளுடன் சந்தோஷமாய்...!!!
நாளைய விடியலுக்காய்
விழித்திருக்கும் பல விழிகள்....!!!
எப்படி இருப்பினும்
உன்னை எதிர்கொள்ள
எம்மால் முடியாதம்மா...!!!

அடுத்தடுத்து துன்பங்கள்
அயராது தாக்கினாலும் 
எதிர்நீச்சல் போட்டிடலாம்..!!
அன்னையே உன்னை 
எதிர்த்திட முடியாதம்மா...!!!
இரங்கலாய் கேட்கின்றோம் 
இரக்கம் காட்டாயோ????

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...