Dec 8, 2012

நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்

வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012,
indian-jewellery-shopping11. பெண்களே! உங்கள் முகம் வட்ட‍ வடிவமாக உள்ள‍து. அப்ப‍டியென் றால், ஜிமிக்கி என்ற காதணி வகையை உங்கள் காதுகளுக்கு அணி யலாம்.
2. குட்டையான‌ கழுத்து உடையவர்க ள் அளவில் நீண்ட தங்க நகைகளை யும், ஜிமிக்கி வகைகளையும் அணிய லாம்.
3. நீண்ட கழுத்து உடைய பெண்கள் குட்டையான நகைகள் அதாவது கழு த்தோடு தழுவும் நெக்லஸ் போன்ற நகைகளை அணியலாம்.
3. உயரமான தோற்ற‍ம் கொண்ட பெண்கள் சற்று பெரிய அளவிலான நகைகளை அணிந்தால் மட்டுமே எடுப்பான தோற்ற‍மளிக்கும்.
4. எப்போதும் எங்கேயும் அதிக எண்ணிக்கையில் நகைகளை அணிந்துகொண்டு செல்ல‍ வேண் டாம். முக்கிய விஷேசங்களான திருமணம் அல்லது நிச்சயதார்த்த ம் போன்ற நிகழ்ச்சிகளின்போது மட்டும் அதிக

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ்

  • டோக்கியோ : ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் உள்ள சென்டாய் நகரை மையமாகக் கொண்டு அப்பகுதியின் சுமார் 245 கி.மீட்டர் சுற்றளவில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என அளவிடப்பட்டுள்ள இந்த நில நடுக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது.பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நில நடுக்கம் காரணமாக அங்கு கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன. இதனையொட்டி, ஜப்பானின் கிழக்கு கடற்கரை, மியாமி கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாலை 6.02 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சுனாமி காரணமாக கடல் அலைகளின் உயரம் 2 மீட்டர் வரை உயரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து சுனாமி பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
    பின்னர் இரவு 7.20 மணியளவில் ஏற்கனவே விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் சுனாமி அச்சத்தில் இருந்த இஷினேமாக்கி, மியாகி, அவுமோரி, இபாராக்கி பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இந்த நில நடுக்கத்தால், ஒங்கேவா மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் புகுஷிமா டாய்ச்சி, புகுஷிமா டய்னி மின் உற்பத்தி நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டோக்கியோ அருகேயுள்ள நரிடா விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளது. செண்டாய் விமான நிலையத்தின் வழியாக செல்லும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
    ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவில், ஜப்பானை குலுக்கிய நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டில் இதுவரை இப்பகுதியில் 9 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு உருவானது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அலுவகலத்தில் பணியிலிருந்தவர்களும் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி ஓடினர். கடுமையான நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால அப்பகுதியிலுள்ளோர் அச்சத்துடன் உள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால், 2011 ஆம் ஆண்டு உருவானதுபோன்ற பேரலைகள் ஏற்படவாய்ப்பில்லை என கருதப்படுகிறது. செண்டாய் பகுதியில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் இது 9 ஆவது நிலநடுக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்டேட்:
நேற்று மாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் இன்று காலை சுனாமி அடித்தது. எனினும், சுனாமி அலைகளின் உயரம் பாதிப்பில்லாத அளவுக்கு 1 மீட்டர் உயரத்துக்குள் இருந்ததால் சுனாமி அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.



கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர


் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,

Dec 7, 2012

முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி



முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தாரா ஹாக்ஸ் (23). இவர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார். டு காங்க் பே என்ற சுற்றுலா தளத்துக்கு செல்லும் சொகுசு கப்பலில் பணியாளராக இருந்து வருகிறார். டு காங்க் பே சென்ற அவர் அங்குள்ள குளம் ஒன்றில் இறங்கி நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு திடீரென வந்த முதலை படுவேகமாக தாராவின் காலை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருந்தும் முதலை அவரை விடவில்லை. காலை மெதுவாக வாய்க்குள் இழுக்க தொடங்கியது. இதைப் பார்த்து ஓடிவந்த தாராவின் நண்பர் ஆலன் முதலையின் வாயை பிளந்து காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
 
இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார். இதனால் நிலை குலைந்த முதலை வாயை திறந்து பின் வாங்கியது. உடனே ஆலனும், மற்றொருவரும் சேர்ந்து தாராவை காப்பாற்றினர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது

மாலத்தீவுக்கான நிதி உதவி ரத்து: இந்திய அரசு நடவடிக்கை


FILE
மாலத்தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கொண்டுள்ள ஜிஎம்ஆர்-ன் கான்டிராக்ட்டை அந்த அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவியை தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது.

மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இந்திய அரசு சார்பில் எந்த தகவலும் தங்களுக்கு தரப்படவில்லை என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது.

நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் விதாமாக ஜிஎம்ஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முழு அதிகாரம் மாலத்தீவு அரசுக்கு உள்ளதாக சிங்கபூர்

ஜப்பானுக்கு அருகில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை வாபஸ்



ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் இன்று மாலை கடலின் மத்தியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகி இருந்ததால், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எதிர்பார்த்தது போன்றே சில சிறியளவிலான சுனாமி கரையோர கிராமங்களை தாக்கியுள்ளது.  எனினும் தற்போது ஜப்பானின் வடகிழக்கு நகரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் நகர்ப்புறங்களில் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

டோக்கியா: ஜப்பான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகள் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9-வது முறையாக இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் கடந்த 2011-ம் ஆண்டைப் போல பெரும் சுனாமி பேரலைகளை உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரையிலான உயரத்துக்கே அலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்!

marina beach dolphin fishமெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.
நேற்று வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகை
யை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை.

Dec 6, 2012


இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என ஆரம்பித்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும்.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாசா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.


இது உண்மையா? அறிந்த வரையில் நாசா அப்படி எந்த எச்சரிக்கையையும்

சிறந்த நகரங்களின் பட்டியலில் ஒட்டாவா, டொரோண்டோவை முந்தியது வன்கூவர்!

சிறந்த நகரங்களின் பட்டியலில் ஒட்டாவா, டொரோண்டோவை முந்தியது வன்கூவர்!

News Service உலகளவில் தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்களின் வரிசையில் கனடாவின் வன்கூவர் ஐந்தாவது இடத்தைப்பிடித்துள்ளது. Mercer ஆய்வகம் உலகளவில், தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது.
  
இந்தப்பட்டியலில் வியன்னா முதலிடத்திலும், சூரிச் இரண்டாமிடத்திலும், ஒக்லாந்து மூன்றாமிடத்திலும், மியூனிச் நான்காமிடத்திலும் உள்ளன. வன்கூவர் ஐந்தாமிடத்தில் உள்ளது. கனடாவின் ஒட்டாவா 14வது இடத்தையும், டொரோண்டோ 15வது இடத்தையும், மொன்றியல்23வது இடத்தையும்,கேல்கரி32வது இடத்தையும் பிடித்துள்ளன.
வாழ்க்கைத்தரம் குறைந்த நகரங்களின் பட்டியலில் சூடான், சாட், போர்ட் ஆப் பிரின்ஸ் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்கூய் போன்றவை இடம்பெற்றுள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...