Feb 6, 2013

ஏர்செல்லுடன் கைகோர்த்தது பேஸ்புக்



வாய்ஸ் அப்டேட்டிற்காக, ஏர்செல்லுடன் நிறுவனத்துடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது. சமுகவலை இணைதளங்களில் ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக், இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்செல்லுடன் இணைந்து வாய்ஸ் அப்டேட்டை வழங்குகிறது.

இதுகுறித்து, ஏர்செல் நிறுவன உயர் அதிகாரி குர்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதன்படி, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் ‌மொபைல்போனில் வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் தங்களது குரலை பதிவு செய்து, பேஸ்புக்கில் அப்டேட் செய்தால், இந்த பதிவு, எஸ்எம்எஸ் மூலம், அவருடைய பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அவர்களும், இதே முறையில் அவருக்கு பதிலளிக்கலாம். இந்த சேவைக்கு இண்டர்நெட் பயன்பாடு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பேஸ்புக்கில் சங்கமித்துள்ள நிலையில், இந்த கைகோர்ப்பு தங்கள் நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும் என்பதில் ‌யாதொரு சந்தேகமுமில்லை என்று ‌அவர் ‌அதில் தெரிவித்துள்ளார்.


Read more: http://therinjikko.blogspot.com/2011/02/blog-post_02.html#ixzz2K8ovtUzN

விண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)



UEFI என்பதனை United Extensible Firmware Interface என விரிக்கலாம். கம்ப்யூட்டர் ஒன்றின் இயக்கத் தொடக்க நிலைகளில் ஒன்று என இதனைக் கூறலாம். 

பூட் அல்லது பூட்டிங் என்று சொல்லப்படுகிற, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் நிலை என்பது, கம்ப்யூட்டர் இயங்குவதற்கென வரிசையாக மேற்கொள்ளப்படுகிற செயல்பாடுகளாகும். பவர் பட்டன் அழுத்தி, கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு நாம் அதன் முன் அமர்ந்து கொள்கிறோம். 

ஸ்டார்ட் ஸ்கிரீன் வரும் முன், கம்ப்யூட்டரின் பூட் இயக்கம் நமக்குப் பல திரைகளைக் காட்டுகிறது. இதில் பல தொழில் நுட்ப தகவல்கள் காட்டப்படுகின்றன. இவற்றில் பல நமக்குப் புரியாத, பெரும்பாலான நேரங்களில் தேவைப்படாத தகவல்களாகவே இருக்கின்றன. 

இதற்குச் சிறிது நேரத்திற்குப் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் கம்ப்யூட்டரில்

Feb 4, 2013

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரியவந்துள்ளது. சுமார் 50 மீற்றர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லூக்கு 2012 டி14 என்று பெயரிட்டுள்ளனர்.
அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீற்றர் தூரத்தில் உள்ளபோதும் இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லூக்கும் இடையே மிக குறைவானது என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது என்றும் வருகிற 15ம் திகதி அது பூமியை கடந்து செல்கிறது எனவும் நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908ம் ஆண்டு பூமியை தாக்கியது. ரஷ்யாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்த இந்த விண்கல்லால் பல நூறு சதுர கி.மீற்றர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு கோடீஸ்வரர்களுக்காக சுவிஸ் வங்கிகளில் புதிதாக பெட்டகவசதி!

News Service
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களுக்காக, தங்கக் கட்டிகள், அதிக மதிப்புடைய சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஆகியவற்றை சேமிப்பதற்கான பெட்டக வசதி உள்பட சிறப்பு கணக்கு சேவையை தொடங்கி உள்ளன. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிஸ் வங்கிகள் இந்தத் தகவலை தெரிவித்தன.
தங்கக் கணக்கு மற்றும் வைரம், 1,000 சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை சேமிப்பதற்கான பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கான கட்டணங்களை இவ்வங்கிகள் கணிசமாக உயர்த்தி உள்ளன. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் கறுப்புப் பணத்துக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் அடைக்கலம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வங்கிகளில் இந்தியர்கள் மட்டும் பல லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் ரகசியக் கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியர்கள் ரூ.12,800 கோடி முதலீடு செய்திருப்பதாக சுவிட்சர்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. சேமிப்புக் கணக்கில் உள்ள முதலீடு தொடர்பான விவரங்களை மட்டுமே கேட்டுப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன. இந்த ஒப்பந்தங்களின்படி, பாதுகாப்புப் பெட்டக விவரங்களை கேட்க முடியாது என்பதால், இத்தகைய புதிய சேவையைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

300 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானி நியூட்டன் எழுதிய புத்தகங்கள்!

News Service
விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் கிடைத்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதை கண்டுபிடித்தவர். ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு என்பது உள்பட இயக்கம் தொடர்பான விதிகளை (லா ஆப் மோஷன்) கூறியவர். இயற்பியல் மட்டுமின்றி கணக்கு, வானியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் வல்லுனராக திகழ்ந்தவர். இங்கிலாந்தில் கி.பி. 1642-ல் பிறந்த இவர் 1727-ல் இறந்தார்.
 
தன் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தின் ஸ்டபோர்டுஷயர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் வில் கார்சைடு (16) என்ற மாணவன் ஈடுபட்டிருந்தான். அப்போது லைம் என்ற பள்ளி வளாகத்தின் ஆய்வுக்கூடத்தில் ஒரு பீரோவில் தூசி படிந்த நிலையில் ஒரு பெட்டி இருப்பதை அவன் கண்டுபிடித்தான். அந்த பெட்டியில் 3 புத்தகங்கள் இருந்தன. அவை லத்தீன் மொழியில் ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள்.
பிலாசபி நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேடிகா என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த புத்தகம் மூன்று பாகங்களாக உள்ளன. 1687-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டவை. அந்த புத்தகங்களில் புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகள் தொடர்பாக ஏறக்குறைய 1000 பக்கங்களுக்கு நியூட்டன் எழுதியுள்ளார். அந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக 1874-ல் இருந்த பிரான்சிஸ் எலியன் கிச்சனர் என்பவர் அந்த புத்தகங்களை வைத்திருந்திருக்கலாம் என தெரிகிறது. புத்தகங்கள் வரலாற்று பெருமை வாய்ந்தவை என்பதால் அவற்றை விற்கப் போவதில்லை என்று பள்ளி நிர்வாகி ஜூலி கூறியுள்ளார்

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

News Service
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரிந்தது. சுமார் 50 மீட்டர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லுக்கு 2012 டி14 என பெயரிட்டுள்ளனர். அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லுக்கும் இடையே மிக குறைவானது என கணிக்கப்பட்டுள்ளது.
  
இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது. வருகிற 15-ந்தேதி அது பூமியை கடந்து செல்கிறது. இந்த தகவலை நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908-ம் ஆண்டு பூமியை தாக்கியது. அப்போது அது ரஷியாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்தது. இதனால் பல நூறு சதுர கி.மீட்டர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.

Feb 3, 2013

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா : 1000 கலைஞர்கள் பங்குகொண்ட பஞ்சரத்ன கீர்த்தனை



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 166வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று திருவையாற்றில் சுமார் 1000 இசைக்கலைஞர்கள் பங்குகொண்ட பஞ்சரத்ன கீர்த்தனை இசை விருந்து கண்கவர் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.
 ஆண்டுதோறும் நடத்தபப்டும் தியாகராஜர் ஆராதனை விழா கடந்த ஐந்து நாட்களாக திருவையாறில் நடைபெற்று வந்தது. நேற்று தியாகராஜர் சுவாமிகளின் முக்தி தினம் என்பதனால், பிரதான நிகழ்வாக பஞ்சரத்ன கீர்த்தனைகள் இடம்பெற்றன. சுமார் 100க்கு மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் கீர்த்தனைகள் பாடி இசைத்தனர். பிரபல பின்னணி பாடகர்கள் யேசுதாஸ், விஜய் யேசுதாஸ், சீர்காழி சிவசிதம்பரம், உன்னி கிருஷ்ணன், சுதா ரகுநாதன் ஆகியோரும் இசைக்கலைஞர்கள், மகதி, அருண், சுமா சுசித்ரா, கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, பிரியா சகோதரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் தியாகராஜர் சுவாமிகள், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகள் இயற்றினார். அதில் பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது.

விஞ்ஞானத் துறையில் ஒபாமாவிடம் விருது வாங்கிய இந்தியர்


விஞ்ஞானத் துறையில் ஒபாமாவிடம் விருது வாங்கிய இந்தியர்

இந்தியாவைச் சேர்ந்த ரங்கசாமி சிறினிவாசன் எனும் விஞ்ஞானிக்குச் சமீபத்தில் அமெரிக்காவின் விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
இவருடன் சேர்த்து இன்னமும் 22 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விருதையளித்துக் கௌரவித்தவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

82 வயதாகும் சிறினிவாசன் IBM இன் தோமஸ் ஜே வத்சன் ஆய்வு கூடத்தில் தனது நண்பரான சாமுவேல்

உள்ளங்கை அளவே உள்ள இங்கிலாந்தின் நவீன உளவு விமானம்



உள்ளங்கை அளவே உள்ள இங்கிலாந்தின் நவீன உளவு விமானம்
லண்டன், பிப். 4- 

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு விமானத்தை ஈடுபடுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 8 அங்குல நீளம் கொண்ட இந்த உளவு விமானத்தின் எடை வெறும் 15 கிராம் தான். 

விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 கேமராக்கள், எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். ஜி.பி.எஸ். கருவி மற்றும் 'ஜாய் ஸ்டிக்' உதவியுடன் இயங்கும் இந்த உளவு விமானத்துக்கு 'பிளாக் ஹார்னட்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த விமானம் எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஓசையை கூட கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் வீடுகட்டும் முயற்சி : முப்பரிமாணப் படங்கள் வெளியீடு!



நிலவின் தரையில் காணப்படும் மூலப் பொருட்களைக் கொண்டே அங்கு எதிர்காலத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கட்டடங்களின் முப்பரிமாண வடிவமைப்பு படங்களைப் பொறியியல் ஊக்குவிப்பாளர்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதாவது முதலில் பூமியில் இருந்து இக்கட்டடங்களின் கட்டமைப்பு நிலவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 3D பிரிண்டர்கள் மூலம் பெறப்பட்ட ஷெல் (Shell) மூலம் வடிவமைக்கப் படவுள்ளது.

இந்த 3D பிரிண்டர்கள் நிலவில் ரோபோட்டுக்கள் மூலம் இயக்கப் படவுள்ளதுடன், இவை ரெகொலித் (regolith) என அழைக்கப்படும் நிலவில் உள்ள மண்ணைப் பயன்படுத்தி கட்டமைப்பைச் சுற்றியுள்ள cover ஐயும் ஆக்கவுள்ளன. இக்கட்டடம் அமைப்பதற்கு நிலவின் தென் முனையில் உள்ள துருவப் பகுதி மும்மொழியப் பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் நிலவில் தங்கி விண்வெளி ஆராய்ச்சி செய்யக் கூடிய குறைந்தது 4 விண்வெளி வீரர்களுக்கான வீடாக இக்கட்டடங்கள் ஆரம்பத்தில் பயன்படுவதுடன் இது மேலும் விரிவு படுத்தப் படலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலவில் உள்ள செயற்கை regolith மண் சிலிக்கன், அலுமினியம், கல்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் ஒக்ஸைட்டு ஆகிய மூலகங்களைக் கொண்டிருப்பதுடன் இவை 3D பிரிண்டர்கள் மூலம் உபயோகப் படுத்தப் பட்டு திண்ம நிலையிலான கட்டமைப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இச் செயற்திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA உம் பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வருங்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் 3D பிரிண்டர்களின் தொழிநுட்ப உதவியுடன் சந்திரன் மற்றும் வேற்றுக்கிரகங்களில் கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப் படவுள்ளது என்பதுடன் இது மிகவும் பிரயோசனம் மிக்க வளர்ந்து வரும் துறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் வெளியான டேப்லெட் கணினிகள்






கடந்த மாதம் 2013ன் ஆரம்பம் என்பதால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது டேப்லெட் கணினிகளை இந்தியாவில்சந்தைப்படுத்தின. விலையுயர்ந்த, சாதாரண விலையுடைய டேப்லெட்களும் விற்பனைக்கு வந்தன.
எந்தெந்த டேப்லெட்கள் கடந்த மாதம் வெளியானது மற்றும் அவற்றின் நுட்பக்கூறுகள் ஆகியவற்றின் விவரங்களை கீழேவிரிவாகக்கொடுத்துள்ளோம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...