Sep 30, 2012

இந்தியாவில் மிக உயரமான ஏசுநாதர் சிலை கேரளாவில் திறப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
கேரளாவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் இந்தியாவிலேயே மிக உயரமான ஏசுநாதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏசுநாதர் சிலை 33.5 அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல கலை இயக்குனரும், சிற்பியுமான பிரேமசந்திரன் என்பவர் இந்த சிலையை உருவாக்கி உள்ளார்.
பைபர், மெழுகு உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை 35 நாட்களில் 30 தொழிலாளர்கள் துணையுடன் இந்த சிற்பி வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை 22.5 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆர்ச் பிஷப் மோரான்
மார் திறந்து வைத்தார்.
இந்த கல்லூரியில் படித்த மிதுன் என்ற மாணவர் சாலை விபத்தில் பலியானதையடுத்து அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த ஏசுநாதர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...