Sep 30, 2012

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்


கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.


நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.

அழுகாத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங் காட்டி, ‘இன்றைக்கு ஒருவாட்டி இவன் அழும்போது, அவனது கோரிக்கைக்கு நாம் செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’ அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான் என்று திட்டி விட்டு அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.

மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது நமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது.


பாடசாலை படிக்கும் போது சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்கள்.


சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி பக்கத்து வீட்டு கமலா வைத்திருக்கும் நகை மாதிரி எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்ப்பார்கள். இல்லையென்றால் அழுது அடம்பண்ணி வாங்கிவிடுவார்கள்.


இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமமாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரியவில்லை.


இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விஷயமாக இருக்கின்றது.


இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால் தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள்.


இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள். பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.


பெண்களின் கண்ணீர் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்.


பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.

பெண்களின் கண்ணீரானது ஆண்களைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
பெண்கள் கண்ணீரின் மூலம் தம் பக்க கருத்துக்களை நியாயமாக்குவார்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...