Sep 30, 2012

ரூ.20,000 கோடியில் உருவாகும் முதல் தனியார் விமான நிலையம்


[ வெள்ளிக்கிழமை, 28 செப்ரெம்பர் 2012,
இந்தியாவில் முதன்முறையாக தனியார் விமான நிலையம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆரன்முளா பகுதியில் அமைய உள்ளது.
இந்த விமான நிலையத்திற்கு கே.ஜி.எஸ். சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விமானநிலையம் தேசிய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ளது.
இது பற்றி பேசிய கே.ஜி.எஸ். நிறுவன இயக்குனர் நந்தகுமார், ரூ.20000 கோடி செலவில் உருவாகும் இந்த விமான நிலையத்தால் ஆரன்முளா பகுதி, பத்தனம்திட்டா மாவட்டம் மட்டுமின்றி கேரளா முழுவதும் வளர்ச்சி அடையும் என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகில் அமைய இருக்கும் இவ்விமான நிலையம், பயன்பாட்டிற்கு வந்தால் சபரிமலை செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...