Oct 6, 2012

சாலை விபத்தில் 16 வயது இளைஞன் பரிதாப மரணம்

October 5, 2012
இன்று அதிகாலை சரியாக 07.39 மணிக்கு 16 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறிய இரக மோட்டார் சைக்கிளில் வரும்போது ஏற்பட்ட விபத்தில் பரிதாப மரணமடைந்துள்ளதாக வடக்கு யூலன்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வண்டியை ஓட்டிய இளைஞன் எதிர்பாராத விதமாக தனக்கான விதி பார வண்டி வடிவில் வருவதைக் கண்டுள்ளார்.
மோதல் இடம் பெற்ற அக்கணமே இளைஞரின் உயிர் விடை பெற்றுவிட்டதாக ஸ்தலத்திற்கு வந்த வைத்தியர்கள் தெரிவித்தார்கள்.
பாரவண்டியை ஓட்டி வந்த 47 வயது சாரதி கதிகலங்கிப் போயுள்ளார்.

இது ஒருபுறமிருக்க..
தெற்கு புய்ன் பகுதியில் உள்ள கெயாபுய் என்ற இடத்தில் வசித்துவந்த 62 வயது நபர் ஒருவர் பலத்த தாக்குதலுக்குள்ளாகி நினைவு தெரியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடித்த அடியில் தாடை இறங்கிவிட்டது, முள்ளுக்கரண்டி கத்தி என்பவற்றால் கீறி இழுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வைத்து மிக நீண்ட நேரம் இவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளார், இதில் ஆணும், பெண்ணுமாக இருவர் சம்மந்தப்பட்டதாகவும், ஒருவர் கைதாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரை தாக்கி அறிவிழக்கச் செய்ய வேண்டிய தேவை யாது என்ற விபரம் இன்னமும் அம்பலத்திற்கு வரவில்லை.
மறுபுறம் ஐந்துபேர் பரடைஸ்காவன் நகரத்தில் உள்ள வீடொன்றில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர், இதில் ஏற்பட்ட சன்னத ஏற்றில் நபர் ஒருவர் 29 வயது பெண்மணியின் கழுத்தில் கத்தியால் சரேலென கோடிழுத்துள்ளார்.
பெண்மணி ஆபத்தில் இருந்து தப்பிவிட்டார் சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
மேலும் நேற்று முன்தினம் றுன்ட்ஸ்ரெல் என்ற இடத்தில் உள்ள கடையொன்றில் உருளைக்கிழங்கு சிப் பையை களவெடுத்து பிடிபட்ட 21 வயது இளைஞரை விசாரித்த போலீசார் அவர் வேறும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள பக்ரா சந்தையில் துப்பாக்கி முனையில் சில ஆயிரங்களை ஜில்லென்று உருவியதும் இவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
தொடர்கின்றன விசாரணைகள்…

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...