Oct 6, 2012

பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!



உலக வன உயிரியல் நிதியம் (WWF) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் சுற்றுச் சூழல் மாசடைவதில் உலக நாடுகள்வகிக்கும் பங்கில் அவுஸ்திரேலியா 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் வாயுவும், அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வாகனப் போக்குவரத்தும் ஆகும் என WWF தெரிவித்துள்ளது.


இக்கணக்கெடுப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது :சுற்றுச் சூழல் மாசடைவதில் முக்கிய பங்கேற்கும் முதல் ஏழு உலக நாடுகளில் தரவரிசை - கட்டார், குவைத், UAE, டென்மார்க், அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் அவுஸ்திரேலியா.இந்தக் கணக்கெடுப்பில் அதிர்ச்சிக்குரிய தகவலாக கருதப் படுவது என்னவென்றால் பூமி நமக்கு வழங்கக் கூடிய வளங்களை விட 50% வீதம் அதிகமாக மனிதன் பூமியிலிருந்து எடுத்துக் கொள்கிறான் என்பதாகும். மேலும் பூமியிலுள்ள அனைத்து மனிதரும் சராசரி அவுஸ்திரேலியனைப் போல் வாழ்ந்தால் இப்போது உலகில் உள்ள சனத்தொகைக்கு கட்டுப்படியாக  3.76 கோள்கள் தேவைப்படும் எனவும் இக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...