Oct 6, 2012

மனிதனைக் குத்திய மங்கைக்கு மறியல்


October 6, 2012

நேற்று முன்தினம் சேர்புய் என்ற இடத்தில் 62 வயது நபரை இருவர் தாக்கியதில் அவர் நினைவிழந்த ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததே.
ஏற்கெனவே இவரைத் தாக்கிய குற்றத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் வரும் நவம்பர் இரண்டாம் திகதிவரை விசாரணைக்காக சிறையில் தள்ளி பூட்டப்பட்டுள்ளார்.
இப்போது அவருடன் இணைந்து தாக்குதலை அரங்கேற்றிய சந்தேகத்தில் 32 வயது பெண்மணி கைதாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் முதியவரை அடித்து, உதைத்து, முள்ளுக்கரண்டி, கத்திகளால் வெட்டி பல மணி நேரம் துன்புறுத்தியுள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
மிகவும் ஆபத்தான நிலையில் முதியவர் இருப்பதால் கைதான இருவருடைய
எதிர்காலமும் ஊசலாடி வருகிறது.
இது இவ்விதமிருக்க கோப்பன்கேகன் வெஸ்ரபோவில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 21 வயது 31 வயதுடைய இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியர் புட்டியால் பெண்மணியின் தலையில் அடித்து, அவர் கழே விழுந்ததும் மீண்டும் பியர் டோசினால் அடித்து கைப்பையை திருடிக் கொண்டு கிறுகி ஓடினார்கள்.
போலீசார் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார், அவரை வைத்து மற்றவரை ஓடும் பஸ்சில் மடக்கிப் பிடித்தார்கள் போலீசார்.
பியர் டின்னால் மண்டையில் அடித்து கொள்ளையடிப்பது புதிய முயற்சியாக இருப்பதால் இந்த விவகாரம் ஊடகங்களின் கவனத்தைத் தொட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...