May 5, 2012

நூல்கோல் வடை.

தேவையான பொருட்கள்:
  1. நூல்கோல் – 2
  2. பொட்டுக்கடலை மாவு – 1 கப்
  3. பச்சை மிளகாய் – 3
  4. இஞ்சி – 1 துண்டு
  5. வெங்காயம் – 3
  6. கறிவேப்பிலை – சிறிது
  7. பூண்டு - 10 பல்
  8. உப்பு – 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் – 1/4 கப்
  10. கடுகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
  • நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்க்கவும்.
  • நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • இதில் கொத்துமல்லித்தழையைப்பொடியாக நறுக்கிப்போட்டு காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி போட்டு, சிவக்க வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதை சாதத்துடன் சேர்த்து   சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
  1. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நூக்கோலைச் சாப்பிட்டு வரலாம். இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.
  2. நூக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...