Dec 26, 2012

விண்கல் ஒன்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர நாசா புதிய திட்டம்


வருங்காலத்தில் மனிதன் செவ்வாய்க் கிரகத்துக்குப் செல்லும் போது அவன் பயணிக்கும் குறித்த விண்கலம் பூமிக்கு வெளியில் இருந்து எரிபொருளை நிரப்பித் தனதுபயணத்தை ஆரம்பிக்கும் வண்ணம் ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்ற நாசா விஞ்ஞானிகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
இச் செயற்திட்டம் எதுவெனில் பூமிக்கு அண்மையில் சூரியனைச் சுற்றி ஒரு ஒழுக்கில் வந்து கொண்டிருக்கும் சுமார் 5 இலட்சம் Kg எடையுடைய விண்கல் ஒன்றைத் திசை திருப்பி விண்ணில் நிலை பெற்றிருக்கும் ISS ஆய்வு கூடத்துடன் இணைப்பதாகும். இதன் மூலம் வருங்காலத்தில் விண்கலங்கள்
பூமிக்கு வெளியே ISS உடன் இணைந்து குறித்த விண்கல்லில் இருந்து எரிபொருளைப் பெற்ற பின்னர் செவ்வாய்க்கு அதிக பணச்செலவும் எரிபொருள் விரயமும் இன்றி இலகுவாகச் செல்லக் கூடிய வாய்ப்பு அமையும்.

இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிறைவேறவுள்ள இச்செயற்திட்டத்துக்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள விஞ்ஞான தொழிநுட்ப பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் $ 2.6 பில்லியன் டாலர்கள் வரை செலவு செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். இச்செயற்திட்டம் நிறைவேறினால், விண்ணில் உள்ள பொருள் ஒன்றை மனிதன் தன் முயற்சியால் இடம்பெயர வைத்த முதலாவது சம்பவமாக இது வரலாற்றில் பதியப்படும்.

விண்ணில் பூமி மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் ஒழுக்குகளுக்கிடையே வந்து செல்லும் இந்த விண்கல்லை அட்லஸ் 5 எனும் ராக்கெட்டு மூலம் கைப்பற்றி நகர்த்தி அதை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடமான ISS உடன் இணைப்பது என நாசா மற்றும் கலிபோர்னியாவின் அறிவியல் தொழிநுட்ப மையம் ஆகியவை இணைந்து முடிவெடுத்துள்ளன.

விண்கற்களில் இருந்து இயற்கை வளங்கள் மற்றும் எரிபொருளைப் பெற முடியும் என்பது 100 வருடங்களுக்குப் பழமையான யோசனையாகும். ஆனால் சமீபத்தில் தான் அதைச் சாத்தியமாக்கக் கூடிய தொழிநுட்பத்தை உலகம் பெற்றுள்ளது. இத் தொழிநுட்பம் மூலம் விண்கற்களில் இருந்து உலோகங்கள் மற்றும் கணிய வளங்களைப் பெறுவதற்கும் சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சில விண்கற்கள் அதிகளவு இரும்பைக் கொண்டிருப்பதாகவும் புதிதாக விண்வெளை ஆய்வு கூடங்களை நிறுவ இவை பயன்படும் என்றும் இன்னும் சில விண்கற்கள் அதிகளவு தண்ணீர் மூலக் கூறுகளால் ஆக்கப் பட்டிருப்பதாகவும் இவற்றில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...