Sep 9, 2012

புதிய ஆலையை அமைக்க போர்ஸ் மோட்டார்ஸ் திட்டம்


புதிய ஆலையை உருவாக்க ரூ.1000 கோடியை முதலீடு செய்ய போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனையில் போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணி நிறுவனமாக உள்ளது. டெம்போ டிராவலர், போர்ஸ் ஒன் எஸ்யூவி, டிராக்ஸ் உள்ளிட்ட பயணிகள் வர்த்தக வாகனங்களையும், சிறிய மற்றும் நடுத்தர ரக சரக்கு வாகனங்களையும் அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய எம்பிவி கார் உள்ளிட்ட ஏராளமான புதிய வர்த்தக வாகனங்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக, உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது இரண்டு ஆலைகள் மூலம் வாகன உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது புதிய ஆலையை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய ஆலை உள்ளிட்டவைக்காக 1000 கோடி வரை முதலீ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...